Vinaavezhuththu ( வினாவெழுத்து )

  வினாப்பொருளைக் காட்ட வருகின்ற எழுத்துக்கள் வினாவெழுத்து என்று பெயர்.இவை சொல்லின் முதலிலும், இறுதியிலும் வரும்.
எ , யா என்னும் எழுத்துக்கள் சொல்லின் முதலிலும்; ஆ , ஓ என்னும் எழுத்துக்கள் சொல்லின் இறுதியிலும்; ஏ என்னும் எழுத்து சொல்லின் முதல்,இறுதி ஆகிய இருவழிகளிலும் நின்று வினாப்பொருளைத் தரும்.

  சான்று :

எது , எவன், யாது , யாவன்
 --- > எ , யா சொல்லின் முதலில் வந்தன.
அவனா? . உண்டானா? , படித்தாளோ? --- > ஆ , ஓ சொல்லின் ஈற்றில் வந்தன
ஏது? , ஏன்? --->  ஏ சொல்லின் முதலில் வந்தது.
  வந்தானே? , பார்த்தாயே? , சொன்னாயாமே? --- > ஏ சொல்லின் இறுதியில் வந்தது.


வினாவெழுத்து அகவினா, புறவினா என இருவகைப்படும்.

அகவினா :

சொற்களின் உள்ளேயே வினாவெழுத்து அமைந்து வருமெனின், அவற்றிற்கு அகவினா எனப்பெயர்.

உதாரணம்:
ஏன் , எங்கு , எப்படி

© Baasha.net