suttezhuthukkal
சுட்டெழுத்துக்கள்

  ஒன்றனை சுட்டிக்காட்ட வரும் எழுத்திற்குச் சுட்டெழுத்து என்று பெயர். அவை அ , இ , உ என்பனவாம். இவை தனியாக வந்தால் சுட்டெழுத்து என்றும், சொல்லோடு வந்தால் சுட்டுப்பெயர் என்றும் கூறுவர்.

உதாரணம்:
அ , இ , உ -> சுட்டெழுத்து
அவன் , இவன் ,உவன்
அவள் , இவள் , உவள் -> சுட்டுப்பெயர்.


சுட்டெழுத்து இரண்டு வகைப்படும். அவை அகச்சுட்டு, புறக்சுட்டு ஆகும்.


அகச்சுட்டு :
சொற்களின் உள்ளேயே சுட்டெழுத்து அடங்கி வருவது அகச்சுட்டு.
உதாரணம் : அவன்,இவன்

புறச்சுட்டு:
சொற்களின் புறத்தே (வெளியே) இச்சுட்டு னிற்குமெனின், அவற்றுக்குப் புறச்சுட்டு எனப்பெயர்.

உதாரணம்: அப்பையன், இப்பையன்

இச்சுட்டெழுத்துக்களுள் அ , இ மட்டும் தற்கால வழக்கில் உள்ளன. உ என்னும் சுட்டெழுத்து சன்க காலத்தில் இறுந்தது, தற்பொழுது மறைந்துவிட்டது.

 


© Baasha.net